செய்திகள்
ஜம்மு காஷ்மீர் போலீசார்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்- ஒருவர் பலி, 25 பேர் காயம்

Published On 2019-11-04 09:49 GMT   |   Update On 2019-11-04 09:49 GMT
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். சுமார் 25 பேர் காயமடைந்தனர்.
ஸ்ரீநகர்: 

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை பழிவாங்கும் விதமாக மிகப்பெரிய தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக  உளவுத்துறை நேற்று எச்சரிக்கை விடுத்தது. 

பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா ஆகிய 2 பயங்கரவாத அமைப்புகள் விரைவில்  தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. வரும் குளிர்காலத்தில் இந்த தாக்குதலை மேற்கொள்ள உள்ளது என  தெரிவித்தது. இதையடுத்து எல்லைப்பகுதிகளிலும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளிலும் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு  வருகிறது. கூடுதல் பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், ஸ்ரீநகர் ஹரி சிங் பகுதியில் இன்று மதியம் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில்  பொதுமக்களில் ஒருவர் பலியாகினார். மேலும் சுமார் 25 பேர் காயமடைந்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  போலீசார் மீட்புப்பணிகளில் ஈடுபட்டிருந்த சமயத்தில் பயங்கரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டனர். இது குறித்து மேலும்  விசாரணை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News