செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 98.5 அடியாக உயர்வு

Published On 2020-10-06 07:58 GMT   |   Update On 2020-10-06 07:58 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரைவிட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீராலும் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண் டிருக்கிறது.

நேற்று 12 ஆயிரத்து 903 கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று நீர்வரத்து 11 ஆயிரத்து 318 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 6 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 850 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரைவிட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று 98.22 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்றும் மேலும் உயர்ந்து 98.51 அடியாக உயர்ந்தது. இனிவரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் 100 அடியை எட்ட வாய்ப்பு உள்ளது.
Tags:    

Similar News