செய்திகள்
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - நாளை நடக்கிறது
மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது மின்சார விநியோகம் குறித்து குறைகள், புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்தலாம்.
திருப்பூர்:
திருப்பூரில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது.
இதுகுறித்து திருப்பூர் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை 15 -ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. அவிநாசி ரோடு, குமார் நகர் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும்.
மின் நுகர்வோர் மின் வாரியம் தொடர்பான தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு காணலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
பல்லடம் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் முகாம் பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத் தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெறுகிறது.
இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது மின்சார விநியோகம் குறித்து குறைகள், புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பல்லடம் செயற்பொறியாளர் கோபால் தெரிவித்துள்ளார்.