செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

எடப்பாடி பழனிசாமியிடம் உடல் நலம் விசாரித்தார் ஓ.பன்னீர்செல்வம்

Published On 2021-04-22 08:37 GMT   |   Update On 2021-04-22 08:37 GMT
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டுக்கு சென்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பார்த்து உடல்நலம் விசாரித்தார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரணியா அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

சிகிச்சைக்கு பிறகு அவர் குணம் அடைந்ததால் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு அடையாறில் உள்ள அரசு வீட்டில் ஓய்வெடுத்த வருகிறார்.

முக்கிய பிரமுகர்கள் அவரது உடல்நிலை பற்றி தொலைபேசி மூலம் விசாரித்தனர். இந்த நிலையில் தேனியில் இருந்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு சென்னை வந்தார்.



இன்று காலையில் முதல்-அமைச்சர் எடப்பாடியை அவரது வீட்டுக்கு சென்று பார்த்து உடல்நலம் விசாரித்தார். அப்போது எதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி விவரித்தார்.

இருவரும் 15 நிமிடம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பது பற்றியும் பேசியதாக தெரிகிறது.

Tags:    

Similar News