செய்திகள்
2-வது மனைவியை கம்பியால் அடித்து கொன்ற முன்னாள் போலீஸ்காரர் கைது
போச்சம்பள்ளி அருகே குடும்ப தகராறில் 2-வது மனைவியை கம்பியால் அடித்து கொன்ற முன்னாள் போலீஸ்காரரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி அருகே உள்ள வாடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 56). இவர் 1986-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை 30 ஆண்டுகள் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவரது முதல் மனைவி மாது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக முதல் மனைவி மாது, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இந்திரா காந்தி (வயது 40) என்பவரை மகேஸ்வரன் 2-வது திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு இனிதா (20) என்ற மகளும், சுந்தரேசன் (18) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி அன்று இரவு இந்திரா காந்திக்கும், கணவர் மகேஸ்வரனுக்கும் குடும்ப தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வந்தது. இதனால் ஆத்திரமடைந்த மகேஸ்வரன், அருகே கிடந்த இரும்பு கம்பியை எடுத்து இந்திரா காந்தி தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து இந்திரா காந்தியை உறவினர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இந்திரா காந்தி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மகேஸ்வரன் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தருமபுரி அருகே உள்ள நார்த்தம்பட்டி என்ற இடத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த மகேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.
2-வது மனைவியை முன்னாள் போலீஸ்காரர் அடித்து கொன்ற சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி அருகே உள்ள வாடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 56). இவர் 1986-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை 30 ஆண்டுகள் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவரது முதல் மனைவி மாது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக முதல் மனைவி மாது, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இந்திரா காந்தி (வயது 40) என்பவரை மகேஸ்வரன் 2-வது திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு இனிதா (20) என்ற மகளும், சுந்தரேசன் (18) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி அன்று இரவு இந்திரா காந்திக்கும், கணவர் மகேஸ்வரனுக்கும் குடும்ப தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வந்தது. இதனால் ஆத்திரமடைந்த மகேஸ்வரன், அருகே கிடந்த இரும்பு கம்பியை எடுத்து இந்திரா காந்தி தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து இந்திரா காந்தியை உறவினர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இந்திரா காந்தி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மகேஸ்வரன் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தருமபுரி அருகே உள்ள நார்த்தம்பட்டி என்ற இடத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த மகேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.
2-வது மனைவியை முன்னாள் போலீஸ்காரர் அடித்து கொன்ற சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.