ஆன்மிகம்
கணபதி மணியக்காரம்பாளையம் சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

கணபதி மணியக்காரம்பாளையம் சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2021-04-12 05:10 GMT   |   Update On 2021-04-12 05:10 GMT
கோவை கணபதி மணியக்காரம்பாளையம் பிரிவு அண்ணா நகரில் உள்ள சூலக்கல் மாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன. பின்னர் அம்மன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்துடன் காட்சி அளித்தார்.
கோவை கணபதி மணியக்காரம்பாளையம் பிரிவு அண்ணா நகரில் சூலக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் புகழ்வாய்ந்தது என்பதால், இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

இந்த கோவிலில் அமாவாசையையொட்டி சிறப்பு அலங்காரம் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன. பின்னர் அம்மன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்துடன் காட்சி அளித்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முகக்கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர்.
Tags:    

Similar News