தமிழ்நாடு
கள்ளக்காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
சேலத்தில் கள்ளக்காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம், அம்மாப்பேட்டை குண்டு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேஷ். இவருடைய மகள் சத்யா (வயது 23).
இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அம்மாப்பேட்டை நாமமலை தெற்கு காலனியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 வயதில் அஸ்வின் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சத்யா, சேலம் மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். இதேபோல் அம்மாப்பேட்டை ஜோதி தியேட்டர் அருகே உள்ள சாணிகுட்டை தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஷ்ணு (27) என்பவரும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.
ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்ததால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த விஷயம் கணவர் சதீஷ்குமாருக்கு தெரியவந்தது. இதைடுத்து சதீஸ்குமார், தனது மனைவியிடம் விஷ்ணுவுடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறி தகராறு செய்து வந்தார். அவர்களை அக்கம்-பக்கத்தினர் சமாதானம் செய்து பார்த்தனர். இருப்பினும் அவர்களுக்குள் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது. நாளுக்கு நாள் சண்டை அதிகமானதை தொடர்ந்து சத்யா, தனது குழந்தையுடன் கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதற்கிடையே விஷ்ணுவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்து வந்தனர். இதனை அறிந்த சத்யா அதிர்ச்சி அடைந்தார். விஷ்ணுவிடம் நம் கள்ளக்காதல் விவகாரத்தால் என் வாழ்க்கை சீரழிந்து விட்டது. தினம் தினம் கணவர் தகராறு செய்கிறார். அவருடன் வாழ விருப்பம் இல்லை. என்னை கைவிட்டு விட்டு, வேறு இடத்தில் திருமணம் செய்யாதீர்கள். என்னை திருமணம் செய்யுங்கள். நாம் வேறு எங்காவது சென்று சந்தோஷமாக வாழலாம் என கெஞ்சினார்.
இதனால் விஷ்ணு, தனது காதலியை கைவிட மனம் இல்லாமல் வாழ்ந்தால் நாம் இருவரும் சேர்ந்து வாழ்வோம். விரைவில் பெற்றோர் சம்மதம் தெரிவித்ததும் உன்னை திருமணம் செய்கிறேன் என கூறியதாக தெரிகிறது.
இதை கேள்விப்பட்ட சதீஷ்குமார் இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். இதனால் மனமுடைந்த சத்யா, விஷ்ணு, நம்மை நிம்மதியாக வாழ விடமாட்டார்கள். பிரித்து விடுவார்கள். எனவே தற்கொலை செய்து கொள்வதே மேல் முடிவு செய்தனர்.
இதையடுத்து சத்யா தனது குழந்தையை பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு விஷ்ணுவுடன் இன்று அதிகாலை 5 மணி அளவில் வீட்டை விட்டு வெளியேறி அம்மாபேட்டை மிலிட்டரி சாலைக்கு வந்தார். அங்கு குருவாயூரப்பன் கோவில் எதிரே ரெயில்வே தண்டவாளம் அருகே இருவரும் காத்திருந்தனர். அப்போது பாண்டிச்சேரியில் இருந்து சேலம் நோக்கி வேகமாக யஷ்வந்த்பூர் ரெயில் வந்து கொண்டிருந்தது.
இதை பார்த்ததும், இருவரும் இறுக்கமாக கைகளை பிடித்துக்கொண்டு ரெயில் முன் பாய்ந்தனர். இதில் விஷ்ணு, முகம், உடல் சிதறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சத்யா, தூக்கி வீசப்பட்டார். அவரது தலை, கை, கால் உடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அம்மாப் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, 2 தரப்பு பெற்றோரையும் வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரெயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம், அம்மாப்பேட்டை குண்டு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேஷ். இவருடைய மகள் சத்யா (வயது 23).
இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அம்மாப்பேட்டை நாமமலை தெற்கு காலனியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 வயதில் அஸ்வின் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சத்யா, சேலம் மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். இதேபோல் அம்மாப்பேட்டை ஜோதி தியேட்டர் அருகே உள்ள சாணிகுட்டை தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஷ்ணு (27) என்பவரும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.
ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்ததால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த விஷயம் கணவர் சதீஷ்குமாருக்கு தெரியவந்தது. இதைடுத்து சதீஸ்குமார், தனது மனைவியிடம் விஷ்ணுவுடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறி தகராறு செய்து வந்தார். அவர்களை அக்கம்-பக்கத்தினர் சமாதானம் செய்து பார்த்தனர். இருப்பினும் அவர்களுக்குள் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது. நாளுக்கு நாள் சண்டை அதிகமானதை தொடர்ந்து சத்யா, தனது குழந்தையுடன் கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதற்கிடையே விஷ்ணுவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்து வந்தனர். இதனை அறிந்த சத்யா அதிர்ச்சி அடைந்தார். விஷ்ணுவிடம் நம் கள்ளக்காதல் விவகாரத்தால் என் வாழ்க்கை சீரழிந்து விட்டது. தினம் தினம் கணவர் தகராறு செய்கிறார். அவருடன் வாழ விருப்பம் இல்லை. என்னை கைவிட்டு விட்டு, வேறு இடத்தில் திருமணம் செய்யாதீர்கள். என்னை திருமணம் செய்யுங்கள். நாம் வேறு எங்காவது சென்று சந்தோஷமாக வாழலாம் என கெஞ்சினார்.
இதனால் விஷ்ணு, தனது காதலியை கைவிட மனம் இல்லாமல் வாழ்ந்தால் நாம் இருவரும் சேர்ந்து வாழ்வோம். விரைவில் பெற்றோர் சம்மதம் தெரிவித்ததும் உன்னை திருமணம் செய்கிறேன் என கூறியதாக தெரிகிறது.
இதை கேள்விப்பட்ட சதீஷ்குமார் இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். இதனால் மனமுடைந்த சத்யா, விஷ்ணு, நம்மை நிம்மதியாக வாழ விடமாட்டார்கள். பிரித்து விடுவார்கள். எனவே தற்கொலை செய்து கொள்வதே மேல் முடிவு செய்தனர்.
இதையடுத்து சத்யா தனது குழந்தையை பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு விஷ்ணுவுடன் இன்று அதிகாலை 5 மணி அளவில் வீட்டை விட்டு வெளியேறி அம்மாபேட்டை மிலிட்டரி சாலைக்கு வந்தார். அங்கு குருவாயூரப்பன் கோவில் எதிரே ரெயில்வே தண்டவாளம் அருகே இருவரும் காத்திருந்தனர். அப்போது பாண்டிச்சேரியில் இருந்து சேலம் நோக்கி வேகமாக யஷ்வந்த்பூர் ரெயில் வந்து கொண்டிருந்தது.
இதை பார்த்ததும், இருவரும் இறுக்கமாக கைகளை பிடித்துக்கொண்டு ரெயில் முன் பாய்ந்தனர். இதில் விஷ்ணு, முகம், உடல் சிதறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சத்யா, தூக்கி வீசப்பட்டார். அவரது தலை, கை, கால் உடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அம்மாப் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, 2 தரப்பு பெற்றோரையும் வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரெயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.