செய்திகள்
கோப்புப்படம்

சேவல் சண்டையில் ஈடுபடும் கல்லூரி மாணவர்கள்

Published On 2021-07-22 08:34 GMT   |   Update On 2021-07-22 08:34 GMT
கடந்த 2 நாட்களுக்கு முன், கருவலூரில் சேவக்கட்டு விளையாட்டில் ஈடுபட்ட 19 முதல், 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
அவிநாசி:

திருப்பூர் மாவட்டம்  அவிநாசி சுற்றுவட்டார கிராமப்புறங்களில் மதியம் மற்றும் மாலை நேரங்களில் சேவக்கட்டு, சீட்டாட்டம் போன்ற தடை செய்யப்பட்ட விளையாட்டுகளில் பலரும் ஈடுபடுவதாக புகார்கள்  எழுந்துள்ளது.

கடந்த  2 நாட்களுக்கு முன், கருவலூரில் சேவக்கட்டு விளையாட்டில் ஈடுபட்ட  19 முதல், 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், 

சேவல்களை வைத்துக்கொண்டு, பொழுதுபோக்கு அடிப்படையில் சேவல் சண்டையில் ஈடுபடுகின்றனர்.இதனால்  பல இடங்களில் பிரச்சினை, சண்டை ஏற்படுகிறது. இச்செயல்களை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும். 

இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் கல்லூரி  மாணவர்கள் கூட ஈடுபடுவது  வேத னையளிக்கிறது. அவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News