செய்திகள்
தங்கம் விலை மேலும் உயர்வு- ஒரு சவரன் ரூ.29,304
தங்கம் விலை இன்று சவரனுக்கு மேலும் 152 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 29 ஆயிரத்து 304 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
சென்னை:
தங்கம் விலை கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஏற்ற, இறக்கங்களுடன் காணப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு சவரன் தங்கம் ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது.
பிறகு விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. ரூ.30 ஆயிரத்தை தாண்டிய நிலையில் அடுத்த 10 நாட்களில் பவுனுக்கு ரூ.1,500 வரை குறைந்தது. அதன் பிறகும் தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் காணப்பட்டு வந்தது.
அக்டோபர் மாதத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து ரூ.29 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது. சுமார் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.29 ஆயிரத்துக்கு கீழே இறங்கியது.
சென்னையில் நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.28,944-க்கும், ஒரு கிராம் ரூ.3,018-க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்து ஒரு பவுன் ரூ.29,152-க்கும், ஒரு கிராம் ரூ.3,644-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்தது. இன்று காலை சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.18 உயர்ந்து ரூ.3,662-க்கும், சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.29,296-க்கும் விற்பனையானது. பிற்பகல் சவரனுக்கு மேலும் 8 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.29,304-க்கும், ஒரு கிராம் ரூ.3663-க்கும் விற்பனை ஆனது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.48-ல் இருந்து 40 காசுகள் உயர்ந்து இன்று ரூ.48.40 ஆக இருந்தது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.48 ஆயிரத்து 400-க்கு விற்பனையாகிறது.