செய்திகள்
மழை

போச்சம்பள்ளி பகுதிகளில் தொடர் சாரல் மழை

Published On 2019-09-17 15:21 GMT   |   Update On 2019-09-17 15:21 GMT
போச்சம்பள்ளி பகுதிகளில் தொடர் சாரல் மழை பெய்துள்ளதால் வெப்பம் தனிந்தது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
போச்சம்பள்ளி:

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் மழைபெய்து வருகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் போச்சம்பள்ளி பகுதிகளில் கடந்த வாரங்களில் அவ்வப்போது மழை பெய்தது. நேற்று காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் வெப்பம் குறைந்தபாடில்லை. 

இரவு நேரத்தில் அதிக மேகமூட்டம் இருந்தது. இதனால் மழைவரும் என்ற நிலையில் இரவு 9 மணிக்கு லேசான மழைபெய்தது. அதன்பிறகு சாரல்மழை பெய்தது. இன்று காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பாரூர், புலியூர், பண்ணந்தூர், மஞ்சமேடு, எலுமிச்சை பள்ளம் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.

இதனால் இந்த பகுதியில் வெப்பம் தனிந்து பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News