உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவோம்- நெல்லை கலெக்டர் வேண்டுகோள்

Published On 2022-01-11 11:15 GMT   |   Update On 2022-01-11 11:15 GMT
புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு கேட்டுக் கொண்டுள்ளார்.
நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும்  என்ற அடிப்படையில் போகிப்பண்டிகையினை கொண்டாடி வந்தனர்.

ஆனால் தற்பொழுது போகி பண்டிகையின்போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசுபடுகிறது.

இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. 

வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது.    
   
எனவே, போகி பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Tags:    

Similar News