செய்திகள்
கொள்ளை

மதுரையில் போக்குவரத்து கழக அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை

Published On 2021-10-25 10:18 GMT   |   Update On 2021-10-25 10:18 GMT
மதுரையில் போக்குவரத்து கழக அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை தாசில்தார் நகர் நெல்லை வீதியை சேர்ந்தவர் நளினி (வயது 55). இவரது கணவர் ராஜ். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் சென்னை மண்டல இணை ஆணையராக உள்ளார்.

இந்த நிலையில் நளினி குடும்பத்தினர் கடந்த 12-ந் தேதி வெளியூருக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் முன் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலி, 9 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 20 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர்.

வீடு திரும்பிய நளினி குடும்பத்தினர் நகை-பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து நளினி அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News