செய்திகள்

வேலைபார்த்த வீட்டில் நகை திருடிய வேலைக்கார பெண் கைது

Published On 2019-05-14 09:39 GMT   |   Update On 2019-05-14 09:39 GMT
வேலைபார்த்த வீட்டில் நகை திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

விருகம்பாக்கம் நாராயண முதலி தெருவைச் சேர்ந்தவர் பிரியதர்சினி. கடந்த ஆண்டு இவரது வீட்டில் 14பவுன் நகை திருடு போனது. இதேபோல மேல்தளத்தில் வாடகைக்கு இருந்தவர் வீட்டிலும் 6 பவுன் நகை மாயமானது.

இதுகுறித்து வடபழனி உதவி கமி‌ஷனர் ஆரோக்ய பிரகாசம் உத்தரவின் பேரில் விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் கோமதி விசாரணை நடத்தி வந்தார்.

இந்த இரண்டு வீட்டிலும் வீட்டு வேலை பார்த்த சாலிகிராமம் ஏகாம்பரம் தெருவைச் சேர்ந்த ஐஸ்வர்யாவை நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது கடந்த 10 மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யா விருகம்பாக்கம் பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.அவரிடமிருந்து 11 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News