செய்திகள்
கொரோனா தடுப்பூசி

நாமக்கல் அருகே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு முட்டைகள் வினியோகம்

Published On 2021-09-13 09:19 GMT   |   Update On 2021-09-13 09:19 GMT
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 700-க்கும் மேற்பட்ட முகாம்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. நாமக்கல் அருகே ஆரியூர் ஊராட்சி சமுதாய கூடத்திலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 700-க்கும் மேற்பட்ட முகாம்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. நாமக்கல் அருகே ஆரியூர் ஊராட்சி சமுதாய கூடத்திலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. அங்கு தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மோகனூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தலா 10 முட்டைகள் வழங்கப்பட்டன. மொத்தம் 3 ஆயிரத்து 800 முட்டைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இதேபோல் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த முகாமில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு தலா 5 முட்டைகள் வழங்கப்பட்டன. எலச்சிபாளையம் ஒன்றியம் மருக்கலாம்பட்டி ஊராட்சியில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் முதல் பரிசாக ரைஸ் குக்கர், 2-வது பரிசாக இட்லி குக்கர், 3-வது பரிசாக பால் குக்கர் வழங்கப்படும் என்றும், மேலும் 10 பேருக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தடுப்பூசி செலுத்த ஏராளமான பொதுமக்கள் முகாமில் திரண்டனர்.
Tags:    

Similar News