செய்திகள்
தீ விபத்து ஏற்பட்ட எஃகு ஆலை

சீனா - எஃகு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் பலி

Published On 2019-10-24 10:27 GMT   |   Update On 2019-10-24 10:27 GMT
சீனாவில் உள்ள இரும்பு எஃகு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
பெய்ஜிங்:

சீனா நாட்டின் வடக்கு பகுதியில் ஹபி மாகாணம் அமைந்துள்ளது. அம்மாகாணத்தின் ஹண்டன் நகரில் அந்நாட்டிலேயே இரண்டாவது மிகப்பெரிய இரும்பு எஃகு ஆலை அமைந்துள்ளது.
 
இந்நிலையில், அந்த ஆலையில் ஊழியர்கள் இன்று வழக்கப்போல தங்கள் பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் ஆலையில் பணியில் இருந்த ஊழியர்கள் 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  மீட்புக் குழுவினர் ஆலையில் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டுவந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

எஃகு ஆலையில் நடந்த தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News