செய்திகள்
தற்கொலை

குடிப்பழக்கத்தை தாய் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

Published On 2021-01-13 13:16 GMT   |   Update On 2021-01-13 13:16 GMT
நெட்டப்பாக்கத்தில் குடிப்பழக்கத்தை தாய் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெட்டப்பாக்கம்:

நெட்டப்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகன் கலைவாணன் (வயது 27). ஐ.டி.ஐ. படித்துள்ள இவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு ஊர் சுற்றிவந்தார். 

இதனை அவரது தாய் கன்னியம்மாள் கண்டித்தார். இதனால் மனமுடைந்த கலைவாணன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News