உள்ளூர் செய்திகள்
நெல்லை, தஞ்சையில் புதிய பேருந்து நிலையம்: மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
நெல்லை, தஞ்சயைில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட நெல்லை சந்திப்பில் பெரியார் பேருந்து நிலையம் இயங்கி வந்தது.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்த பேருந்து நிலையம் இயங்கி வந்த நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 79 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் புதிதாக பேருந்து நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது. தற்போது புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணி முடிவடைந்துள்ளது.
அதேபோல் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணியும் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து நெல்லை மற்றும் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.
இதையும் படியுங்கள்.. சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு