செய்திகள்
கோப்புபடம்

மது குடித்து ரகளை செய்வதாக கிராம உதவியாளர் மீது புகார்

Published On 2021-10-11 10:23 GMT   |   Update On 2021-10-11 10:23 GMT
ஏற்கனவே கிராம உதவியாளராக பணியாற்றி வந்த பிரபாகரன் என்பவரை நியமனம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகா விருகல்பட்டி ஊராட்சியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிராம உதவியாளர் முத்துச்சாமி என்பவரை மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது. 

அதில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிராம உதவியாளர் முத்துச்சாமி பணி நேரத்தில் குடித்துவிட்டும், பொதுமக்களை தகாத வார்த்தைகளில் பேசி வருவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். 

அதனால் தற்போது நியமிக்கப்பட்டுள்ள முத்துச்சாமி என்பவரை நீக்கி, ஏற்கனவே கிராம உதவியாளராக பணியாற்றி வந்த பிரபாகரன் என்பவரை நியமனம் செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
Tags:    

Similar News