ஆன்மிகம்
இசக்கியம்மன்

உசரவிளை இசக்கியம்மன் கோவில் கொடை விழா நாளை மறுநாள் தொடங்குகிறது

Published On 2021-03-26 08:26 GMT   |   Update On 2021-03-26 08:26 GMT
புத்தளம் அருகே உசரவிளை, உலகளந்தவர் அருளிய மகாசக்தி இசக்கியம்மன் கோவில் பங்குனி உத்திர கொடை விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
புத்தளம் அருகே உசரவிளை, உலகளந்தவர் அருளிய மகாசக்தி இசக்கியம்மன் கோவில் பங்குனி உத்திர கொடை விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.

முதல் நாள் அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், காலை 6 மணிக்கு அம்மன் கடல் நீராட செல்லுதல், 9 மணிக்கு வில்லிசை, 10 மணிக்கு அலங்கார தீபாராதனை, மதியம் 2 மணிக்கு அன்னதானம், இரவு அலங்கார தீபாராதனை போன்றவை நடக்கிறது.

29-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அலங்கார தீபாராதனை, காலை 7 மணிக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News