வழிபாடு
திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா
பாபநாசத்தில் உள்ள பாலைவன நாதர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா நடந்தது. இதையொட்டி யாக சாலை பூஜைகள் நடந்தன.
பாபநாசத்தில் உள்ள பாலைவன நாதர் கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் குடமுழுக்கு நடந்தது. இதைத்தொடர்ந்து புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா நேற்று நடந்தது. இதையொட்டி யாக சாலை பூஜைகள் நடந்தன.
விழாவில் கோவில் உதவி ஆணையர் வில்வமூர்த்தி, நிர்வாக அதிகாரி ஹரிஷ் குமார், தக்கார் புண்ணியமூர்த்தி, பானுமதி துரைக்கண்ணு, அ.தி.மு.க. மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் துரை அய்யப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் கோவில் உதவி ஆணையர் வில்வமூர்த்தி, நிர்வாக அதிகாரி ஹரிஷ் குமார், தக்கார் புண்ணியமூர்த்தி, பானுமதி துரைக்கண்ணு, அ.தி.மு.க. மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் துரை அய்யப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.