செய்திகள்
தற்கொலை

காவேரிப்பாக்கம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2021-09-11 10:59 GMT   |   Update On 2021-09-11 10:59 GMT
காவேரிப்பாக்கம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம்:

ஓச்சேரியை அடுத்த மாமண்டூர் கிராமம் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55), விவசாயி. இவர் அடிக்கடி உடல் நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். 5-ந்தேதி மீண்டும் அவருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த அவர் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு வீட்டில் மயக்கமடைந்து கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் நேற்று உயிரிழந்தார். அவளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News