வழிபாடு
திருப்பதி

திருப்பதியில் ஆர்ஜித சேவைகள் 3 நாட்கள் ரத்து

Published On 2022-04-12 09:01 GMT   |   Update On 2022-04-12 09:01 GMT
திருப்பதியில் வருடாந்திர வசந்தோற்சவத்தை முன்னிட்டு 3 நாட்கள் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியை எழுந்தருளச் செய்து சிறப்பு ஸ்நாபன திருமஞ்சனம் நடத்த உள்ளது.
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று நிறைவடையும் வகையில் தேவஸ்தானம் வருடாந்திர உற்சவத்தை நடத்தி வருகிறது.

அதன்படி சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 14 முதல் 16-ந் தேதி வரை வருடாந்திர வசந்தோற்சவம் நடைபெற உள்ளது.

இந்த 3 நாட்களும் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியை எழுந்தருளச் செய்து சிறப்பு ஸ்நாபன திருமஞ்சனம் நடத்த உள்ளது.

இதையொட்டி வருகிற 14, 15, 16ந் தேதிகளில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார, சேவை மற்றும் நிஜபாத தரிசனம் சேவை உள்ளிட்டவை ரத்து செய்யப்பட உள்ளன.
Tags:    

Similar News