செய்திகள்
ஆக்சிஜன் சிலிண்டர்கள்

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க வாய்ப்பு

Published On 2021-07-29 08:53 GMT   |   Update On 2021-07-29 08:53 GMT
அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கையின் எதிரொலியாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
ராமநாதபுரம்:

தமிழகத்தில் கொரோனாவின் கொலைவெறி தாக்குதலால் 2-வது அலை வேகமாக பரவி பலர் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் பலியாகினர்.

ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தற்போது 11 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் உள்ளது. இதில் பாண்டிச்சேரியில் இருந்து தனியார் நிறுவனத்தினர் லாரியில் ஆக்சிஜன் கொண்டு வந்து நிரப்பி செல்கின்றனர்.

2-வது பரவலின்போது பெரும்பாலானோர் உடலில் ஆக்சிஜன் குறைவால் மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்சிஜன் பற்றாக்குறை இந்த முறை பெரும் சவாலாக இருந்தது.

இதனை கருத்தில் கொண்டு ஆக்சிஜன் தேவையை தன்னிறைவு பெறச்செய்யும் வகையில் அரசு அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தற்போது 11 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் உள்ளது. இதில் பாண்டிச்சேரியில் இருந்து தனியார் நிறுவனத்தினர் லாரியில் ஆக்சிஜன் கொண்டு வந்து நிரப்பி செல்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் 3-வது அலையை முன்எச்சரிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்தது.

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று, ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணிகள் இரவு-பகலாக நடைபெற்று வருகிறது.

நகாய் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் இதற்கான கட்டிட பணிகளும், மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் ஆக்சிஜன் உற்பத்தி மைய எந்திரங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

காற்றின் மூலம் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வரும் காலங்களில் 3-வது அலையை முன்எச்சரிக்கையுடன் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழப்பு என்ற நிலை இல்லாத வகையில் மக்களை காப்பாற்ற முடியும்.

அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று இந்த மையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கையின் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.


Tags:    

Similar News