செய்திகள்
வாகன சோதனை

லாலாபேட்டையில் வாழைக்காய் வியாபாரியிடம் ரூ.84 ஆயிரம் பறிமுதல்

Published On 2021-04-05 12:10 GMT   |   Update On 2021-04-05 12:10 GMT
கரூர் மாவட்டம், லாலாபேட்டை மேம்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் அர்ஜுனன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
குளித்தலை:

கரூர் மாவட்டம், லாலாபேட்டை மேம்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் அர்ஜுனன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, அந்த வேனில் இருந்த குளித்தலை அருகே உள்ள ஓந்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்த கவுதமன் என்பரிடம் ரூ.84 ஆயிரத்து 90 இருப்பது தெரியவந்துள்ளது. அவர் கேரளாவில் வாழைக்காய் லோடு இறக்கிவிட்டு வந்ததாக கூறியுள்ளார்.

இருப்பினும் அவர் வைத்திருந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாத காரணத்தால், தேர்தல் பறக்கும் படை குழுவினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து, அதை குளித்தலை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கலியமூர்த்தியிடம் வழங்கினர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குளித்தலை கரூவூலத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.
Tags:    

Similar News