செய்திகள்
கோப்புபடம்

ஆறுமுகநேரி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2020-10-18 12:09 GMT   |   Update On 2020-10-18 12:09 GMT
ஆறுமுகநேரி அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆறுமுகநேரி:

காயல்பட்டினத்தில் கஞ்சா விற்பதாக ஆறுமுகநேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் காயல்பட்டினத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது காயல்பட்டினம் மெயின் பஜாரில் உள்ள சீதக்காதி திடல் அருகே சந்தேகப்படும்படி நின்ற ஒருவரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் 10 கிராம் கொண்ட கஞ்சா பொட்டலங்கள் 15 இருந்தது. அதை அவர் அங்குள்ளவர்களுக்கு விற்பதற்காக வைத்திருந்தார் என்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் காயல்பட்டினம் உச்சினிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த அப்துல் ரசாக் மகன் சதாம் உசேன் (வயது 30) என தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News