செய்திகள்
விபத்து

பீகாரில் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி 4 பேர் பலி

Published On 2020-09-08 00:26 GMT   |   Update On 2020-09-08 00:26 GMT
பீகாரில் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் ஆம்புலன்சில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாட்னா:

பீகார் மாநிலத்தில் உள்ள சைன்புரா கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் தனது வீட்டின் மேற்கூரையில் இருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். நேற்று காலை அவரை ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்காக குடும்பத்தினர் ஆம்புலன்சில் அழைத்து சென்று கொண்டிருந்தனர். ஆம்புலன்ஸ் கவுராபார் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆம்புலன்சில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தை தொடர்ந்து ஆம்புலன்ஸ் டிரைவர் தப்பியோடி விட்டார். அவர் குடிபோதையில் ஆம்புலன்சை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
Tags:    

Similar News