ஆன்மிகம்
சிவன்

பிரதோஷ விரதத்தை தொடங்க வேண்டிய காலமும்... கிடைக்கும் பலன்களும்...

Published On 2020-12-10 06:54 GMT   |   Update On 2020-12-10 06:54 GMT
பிரதோஷ விரதத்தை எந்த மாதத்தில் தொடங்க வேண்டும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதால் கிடைக்கு பலன்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

பிரதோஷ விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவன் அருள் கிடைக்கும்.

சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.

பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் பலன்கள் கிடைக்கும்.

பிரதோஷ கால விரதம் ஆவணி, கார்த்திகை ஆகிய மாதங்களில் தொடங்குவது சிறந்தது.

பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.
Tags:    

Similar News