ஆன்மிகம்
தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்தபோது எடுத்த படம்.

சபரிமலை கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு தொடங்கியது

Published On 2020-08-31 05:10 GMT   |   Update On 2020-08-31 05:10 GMT
சபரிமலை கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு தொடங்கியது. கொரோனா பரவலையொட்டி ஓண பண்டிகை சிறப்பு பூஜைக்கும் அனுமதி கிடையாது
கேரளாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஓணம் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இந்த பண்டிகையையொட்டி புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டு ஓணம் பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு தீபாராதனைக்கு பிறகு கோவில் ஊழியர்கள், காவலர்களுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு பிரசாதம் வழங்கினார்.

பின்னர் இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. கொரோனா பரவலையொட்டி ஓண பண்டிகை சிறப்பு பூஜைக்கும் அனுமதி கிடையாது திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்திருந்தது. அதன்படி சனிக்கிழமை பக்தர்கள் இன்றி நடை திறக்கப்பட்டது. நேற்று (ஞாயிற்றுக் கிழமை) அதிகாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு உத்ராட சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

திருவோணம் தினமான நாளை அதிகாலையில் சிறப்பு வழிபாடு, 1-ந் தேதி அவிட்டம் நாள் சிறப்பு பூஜை, 2-ந் தேதி சதயம் நாள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. 5 நாள் பூஜைகளுக்கு பிறகு அன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 16-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து 21-ந் தேதி வரை அந்த மாத பூஜை நடைபெறும்.
Tags:    

Similar News