ஆன்மிகம்
ஏனாதிநாத நாயனாருக்கு குருபூஜை

மயிலாடுதுறையில் ஏனாதிநாத நாயனாருக்கு குருபூஜை

Published On 2020-09-28 03:36 GMT   |   Update On 2020-09-28 03:36 GMT
மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் ஏனாதிநாத நாயனார் குருபூஜை புரட்டாசி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் நடைபெற்றது. குருபூஜை விழாவில் ஏனாதிநாத நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், வழிபாடும் நடைபெற்றன.
மயிலாடுதுறை ஆன்மீக பேரவை மயிலாடுதுறை சைவ சித்தாந்தசபை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திருமன்றம் சார்பில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் ஏனாதிநாத நாயனார் குருபூஜை புரட்டாசி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் நடைபெற்றது. குருபூஜை விழாவில் ஏனாதிநாத நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், வழிபாடும் நடைபெற்றன.

விழாவில் மயூரநாதர் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் டாக்டர் ராம.சேயோன் செய்திருந்தார்.
Tags:    

Similar News