செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி

Published On 2018-12-12 16:58 GMT   |   Update On 2018-12-12 16:58 GMT
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
திருப்பத்தூர்:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் வட்டார வளமையம் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி திருப்பத்தூர் ஆர்.சி.பாத்திமா பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு வட்டார கல்வி அலுவலர் சாந்தி தலைமை வகித்தார்.

கூடுதல் வட்டாரக்கல்வி அலுவலர் மூர்த்தி முன்னிலை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பழனியப்பன் விழாவை தொடங்கி வைத்தார்.

இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கு கொண்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பங்கு பெற்ற அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மேலும் தேநீர், மதிய உணவு வழங்கப்பட்டது. முன்னதாக வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்லக்கண்ணு அனைவரையும் வரவேற்றார். விழா ஏற்பாடுகளை சிறப்பாசிரியர்கள் பிரியா, மார்‌ஷல், பிரகாஷ் மற்றும் ஆசிரியப் பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News