உள்ளூர் செய்திகள்
அமைச்சர்கள் மனுக்கள் பெற்ற காட்சி.

கன்னிவாடியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர்கள்

Published On 2021-12-27 10:05 GMT   |   Update On 2021-12-27 10:05 GMT
பொதுமக்களின் மனுக்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டுமென அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.
தாராபுரம்:

தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிவதுடன், மனுக்களையும் பெற்று வருகின்றனர்.

கடந்த 2 நாட்களாக திருப்பூர் மாநகரில் பொதுமக்களை சந்தித்து மனுக்கள் பெற்ற நிலையில், இன்று தாராபுரம் தொகுதிக்குட்பட்ட கன்னிவாடி பேரூராட்சியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். அப்போது பொதுமக்களின் மனுக்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். 
Tags:    

Similar News