ஆன்மிகம்
கரைமேல் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
திருப்பரங்குன்றம் அருகே ஒத்த ஆலங்குளத்தில் கரைமேல் அம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிந்து கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
திருப்பரங்குன்றம் அருகே ஒத்த ஆலங்குளத்தில் கரைமேல் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு யாக சாலை பூஜைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து கோவிலின் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. மேலும் கோவிலின் கருவறையில் அம்மனுக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான நிலையூர் முருகன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் பிரபு, கிளை செயலாளர் சோமு, ஊராட்சி செயலாளர் பெரியசாமி, பேரவை துணை செயலாளர் அழகர் மற்றும் நிர்வாகிகள் மகாலிங்கம், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.