செய்திகள்
கைது

சேத்துப்பட்டு அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவர் கைது

Published On 2020-09-14 11:05 GMT   |   Update On 2020-09-14 11:05 GMT
சேத்துப்பட்டு அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நூதன முறையில் மணல் கடத்தலில் ஈடுபட்டவரை கைது செய்தனர்.
சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டு அருகே கோனையூர் பகுதியில் சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் மணல் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கோனையூர் செய்யாற்று படுகையிலிருந்து வந்த மினிலாரியை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் நெல் மூட்டைகளுக்கு கீழே மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட கோனையூர் புதிய காலனியை சேர்ந்த நாகவேல் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் சேத்துப்பட்டு அருகே தச்சூர் செய்யாற்று படுகையில் இருந்து தச்சூர் கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் மினிலாரியில் மணல் கடத்தி கொண்டு தேவிகாபுரம் அருகே வந்தபோது சேத்துப்பட்டு போலீசார் வாகனத்தை மடக்கி பிடித்தனர். போலீசாரை கண்டதும் மகாலிங்கம் தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மினிலாரியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய மகாலிங்கத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News