செய்திகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி

தா.பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2019-11-28 14:43 GMT   |   Update On 2019-11-28 14:43 GMT
தா.பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தா.பேட்டை:

தா.பேட்டை கடை வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினார். 

மாவட்ட குழு உறுப்பி னர்கள் சுப்பிரமணியன், சுப்பு, ஒன்றிய நிர்வாகிகள் சேகர், கிருஷ்ணமூர்த்தி, வீரவிஜயன் மற்றும் பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். 

அப்போது குடியிருக்கும் அனைத்து புறம்போக்கு இடங்களையும் நத்தமாக மாற்றி வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும், கோவில், மடம் போன்ற நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும், தா.பேட் டையில் குண்டும், குழியுமாக உள்ள புறவழிச்சாலையை புதுப்பிக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் ரெங்கராஜ், சந்திர மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News