செய்திகள்
கைது

மன்னார்குடியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2021-08-23 09:59 GMT   |   Update On 2021-08-23 09:59 GMT
மன்னார்குடியில் கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மன்னார்குடி:

மன்னார்குடி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மன்னார்குடி கீழப்பாலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கைலாசநாதர் கோவில் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 24) என்பவரையும், மன்னார்குடி உப்புகார தெரு பகுதியில் கஞ்சா விற்ற தாமரைக்குளம் வடகரை பகுதியை சேர்ந்த ராஜா குட்டி என்கிற நம்பிராஜன் (27) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News