செய்திகள்
வழக்கு பதிவு

புலியூர் அருகே தொழிலாளியிடம் பணம் பறித்த 5 பேர் மீது வழக்கு

Published On 2021-07-16 10:26 GMT   |   Update On 2021-07-16 10:26 GMT
புலியூர் அருகே தொழிலாளியிடம் பணம் பறித்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

புலியூர் அருகே உள்ள டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). இவர் வடக்கு பாளையத்தில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த புலியூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 23) உள்பட 5 பேர் சேர்ந்து சிவக்குமாரை மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.500-ஐ பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து சிவக்குமார் கொடுத்த புகாரின்பேரில், தாந்தோணிமலை போலீசார் ஸ்ரீகாந்த் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News