செய்திகள்
கண்ணமங்கலம் அருகே சாராயம் கடத்திய வாலிபர் கைது
கண்ணமங்கலம் அருகே சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம்:
திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில்,சந்தவாசல் வனச்சரகர் பி.செந்தில்குமார் ஆலோசனைப்படி, சந்தவாசல் பிரிவு வனவர் பி.ஏழுமலை மற்றும் வனத்துறையினர் நேற்று அதிகாலை படவேடு பீட், கோட்டை மலை வழி சரகத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் லாரி டியூபில் 10 லிட்டர் சாராயம் கடத்தி வந்த படவேடு வேட்டகிரிபாளையம் சுப்பிரமணியன் மகன் ரவி (வயது22) என்பவரை கைது செய்து போளூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.