செய்திகள்
விபத்து

சேந்தமங்கலம் அருகே மினிலாரி மோதி சமையல் தொழிலாளி பலி

Published On 2020-10-24 08:55 GMT   |   Update On 2020-10-24 08:55 GMT
சேந்தமங்கலம் அருகே மினிலாரி மோதி சமையல் தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
சேந்தமங்கலம்:

நாமக்கல் பழைய முன்சீப் தெருவைச் சேர்ந்தவர் வெங்கட சுப்ரமணியன் (வயது 60). சமையல் தொழிலாளி. இவர் ஒரு பால் மாடு வாங்குவதற்காக நேற்று முன்தினம் சேந்தமங்கலம் அருகே உள்ள இலக்கம்பட்டிக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக எதிரே மரத்துண்டுகள் ஏற்றி வந்த மினிலாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினிலாரியை ஓட்டி வந்த டிரைவரான திருச்சி மாவட்டம் வீரப்பூர் செங்கம்பட்டியை சேர்ந்த இளங்கோவன் (45) என்பவரை கைது செய்தனர். விபத்தில் பலியான வெங்கட சுப்ரமணியனுக்கு ராஜலட்சுமி (51) என்ற மனைவி உள்ளார்.
Tags:    

Similar News