செய்திகள்
கோப்புபடம்

திருப்பத்தூர் அருகே முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

Published On 2020-11-20 10:49 GMT   |   Update On 2020-11-20 10:49 GMT
திருப்பத்தூர் அருகே முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பத்தூர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் நெற்குப்பை பேரூராட்சியில் நேற்று கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

அதன்படி செயல் அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் நேர்முக உதவியாளர் துளசிராமன், திருப்பத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் திருப்பத்தூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தீனதயாளன், சுகாதார ஆய்வாளர்கள் சகாய ஜெரால்ட்ராஜ், ராஜாராம், பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் சிற்றரசு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி ரூ.5 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
Tags:    

Similar News