செய்திகள்
கைது

மீஞ்சூர் அருகே ஆட்டோ திருடிய 2 பேர் கைது

Published On 2019-11-29 07:24 GMT   |   Update On 2019-11-29 07:24 GMT
மீஞ்சூர் அருகே ஆட்டோ திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மீஞ்சூர்:

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகவத்சிங் நகரை சேர்ந்தவர் அசோக் குமார்.

நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த ஆட்டோ திருடு போனது. இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் எண்ணுரை சேர்ந்த செய்யது ( 28) தண்டையார்பேட்டை சேர்ந்த நாகராஜ்( 29) ஆகியோர் ஆட்டோவை திருடி சென்றது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News