செய்திகள்
டெல்லியில் பயங்கர தீ விபத்து - ஒருவர் பலி
டெல்லி பட்பார்கஞ்ச் தொழிற்பேட்டை பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
புதுடெல்லி:
கிழக்கு டெல்லியில் உள்ள பட்பார்கஞ்ச் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள மூன்றடுக்கு மாடி அச்சகத்தில் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புப்படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்கடங்காமல் பற்றி எரிய ஆரம்பித்ததால் சுமார் 30 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காலை 8 மணிக்கு தீ கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த கோர விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். அச்சகத்திற்கு சொந்தமான பல பொருட்கள் தீயில் கருகி நாசமானதாக கூறப்படுகிறது, இந்த சம்பவம் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் டெல்லியின் பீர்கிரி பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் தீயணைப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார், 14 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தகக்கது.