செய்திகள்
3 கோவில்களில் 3 வேளை அன்னதான திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
சமயபுரம் கோவிலில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 3 வேளை அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
சென்னை:
திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோவில்களில் 3 வேளை அன்னதானம் தரும் திட்டத்தை தலைமைச்செயலகத்தில் காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இந்து சமய அறிநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ஆணையர் குமரகுருபரன் பங்கேற்றனர்.
ஏற்கனவே உள்ள ஸ்ரீரங்கம், பழனி கோவில்களையடுத்து 3 வேளை அன்னதான திட்டம் நடைபெறும் கோவில்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
சமயபுரம் கோவிலில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 3 வேளை அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோவில்களில் 3 வேளை அன்னதானம் தரும் திட்டத்தை தலைமைச்செயலகத்தில் காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இந்து சமய அறிநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ஆணையர் குமரகுருபரன் பங்கேற்றனர்.
ஏற்கனவே உள்ள ஸ்ரீரங்கம், பழனி கோவில்களையடுத்து 3 வேளை அன்னதான திட்டம் நடைபெறும் கோவில்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
சமயபுரம் கோவிலில் தலைவாழை இலையில் ஜாங்கிரி, சாதம், சாம்பார், கூட்டு, பொரியல், வடை, பாயாசம், ரசம், மோர் வழங்கப்பட்டது.
சமயபுரம் கோவிலில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 3 வேளை அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படும் வரை நாளை முதல் கோவில்களில் அன்னதானம் பார்சலில் வழங்கப்படும்.
இதையும் படியுங்கள்...உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி- கமல்ஹாசன் அறிவிப்பு