செய்திகள்
கோப்புபடம்

உடுமலை அருகே டிரைவருடன் தகராறு - 2 பேர் மீது வழக்கு

Published On 2021-10-08 08:24 GMT   |   Update On 2021-10-08 08:24 GMT
கடந்த 5-ந்தேதி விஜய் அளித்த புகாரின் பேரில் தளி போலீசார் விசாரித்து வந்தனர்.
உடுமலை:

உடுமலையை அடுத்த மடத்துக்குளம் தாலுகா தாசர்பட்டியைச் சேர்ந்தவர் விஜய் ( வயது 21). டிரைவர். இவரும் தளியை அடுத்த பாலாதுறையைச் சேர்ந்த ஒரு பெண்ணும் நட்பு ரீதியாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி இரவு 8 மணிக்கு விஜய் தனது நண்பருடன் அந்த பெண்ணை பார்ப்பதற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்தப் பகுதியில் சிறு சிறு திருட்டு சம்பவம் நடைபெற்று வந்தது. இதனால் சந்தேகமடைந்த அங்கிருந்த சின்னச்சாமி உள்ளிட்ட 2 பேர் அவர்களை விசாரித்ததாக தெரிகிறது.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த 5-ந்தேதி விஜய் அளித்த புகாரின் பேரில் தளி போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்றனர். 

அதைத் தொடர்ந்து தளி காவல் நிலையத்திற்கு சென்ற துணை சூப்பிரண்டு தேன்மொழிவேல், விஜய் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சின்னச்சாமி உள்ளிட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 
Tags:    

Similar News