செய்திகள்
ஸ்மித்

இஷாந்த் சர்மா இல்லாத இந்திய பந்து வீச்சு பலவீனமே.... ஸ்டீவ் ஸ்மித்

Published On 2020-12-11 11:38 GMT   |   Update On 2020-12-11 11:38 GMT
சீனியர் வீரரான இஷாந்த் சர்மா இந்திய அணியில் இல்லாதது, அந்த அணிக்கு பலவீனம் என ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி 2018-19-ல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியபோது, 2-1 எனத் தொடரை கைப்பற்றியது, அப்போது பும்ரா 21 விக்கெட்டும், ஷமி 16 விக்கெட்டும் வீழ்த்தினர். அதேவேளையில் இஷாந்த் சர்மா 3 போட்டியில் 11 வீழ்த்தினார்.

வருகிற 17-ந்தேதி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தொடங்குகிறது. இந்த முறை இந்திய அணியில் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா காயத்தால் இடம் பெறவில்லை.

இஷாந்த் சர்மா இல்லாதது இந்திய அணிக்கு பலவீனம்தன் என ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இஷாந்த் சர்மா குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் ‘‘இஷாந்த் சர்மா இல்லாதது இந்தியாவுக்கு அநேகமாக மிகப்பெரிய இழப்பாக இருக்கலாம். தற்போது அதிகமான போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் சிறந்த பந்து வீச்சாளர். அவர் இல்லாமல், இந்தியாவில் பந்து விச்சு வலுவிழந்து போகலாம். அவர்கள் இஷாந்த் சர்மாவுடன் விளையாட விரும்பியிருப்பார்கள் என்பதை என்னால் உறுதியாக கூற இயலும்’’ என்றார்.
Tags:    

Similar News