செய்திகள்
மின்னணு வாக்கு இயந்திரத்தை குடிபோதையில் உடைத்தவர் கைது
ஆலங்குடி வாக்குச்சாவடியில் மின்னணு வாக்கு இயந்திரத்தை குடிபோதையில் ஒருவர் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை:
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. இரவு 7 மணி வரை வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆலங்குடி வாக்குச்சாவடியில் மின்னணு வாக்கு இயந்திரத்தை குடிபோதையில் ஒருவர் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி பஞ்சாயத்து ஆலங்குடி கிராமத்தில் குடிபோதையில் தகராறு செய்த ஆனந்தன் என்பவர் அரிவாளை கொண்டு வாக்குப்பதிவு இயந்திரத்தை அடித்து நொறுக்கினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அறந்தாங்கி காவல் ஆய்வாளர் அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. இரவு 7 மணி வரை வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆலங்குடி வாக்குச்சாவடியில் மின்னணு வாக்கு இயந்திரத்தை குடிபோதையில் ஒருவர் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி பஞ்சாயத்து ஆலங்குடி கிராமத்தில் குடிபோதையில் தகராறு செய்த ஆனந்தன் என்பவர் அரிவாளை கொண்டு வாக்குப்பதிவு இயந்திரத்தை அடித்து நொறுக்கினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அறந்தாங்கி காவல் ஆய்வாளர் அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.