செய்திகள்
உள்ளாட்சி தேர்தல்: மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.
போரூர்:
உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டங்களாக வருகிற 27-ந் தேதி மற்றும் 30-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த், மாவட்ட செயலாளர்கள் மற்றும் எல்.கே. சுதிஷ் தலைமையிலான தேர்தல் தொகுதி பங்கீடு குழுவினருடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
தே.மு.தி.க.விற்கு வெற்றி வாய்ப்பு உள்ள இடங்கள் எவை, அ.தி.மு.க.விடம் இருந்து எந்தெந்த இடங்களை கேட்டு பெறுவது, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.பொருளாளர் பிரேமலதா, மாவட்ட செயலாளர் போரூர் தினகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.