உள்ளூர் செய்திகள்
ஆம்பூரில் பைக் மோதி பஸ் கண்டக்டர் இறந்தார்.
ஆம்பூர்:
திருப்பத்தூரை சேர்ந்தவர் ராமலிங்கம் (51) ஆம்பூரில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் பணி முடித்து வீட்டிற்கு செல்வதற்காக ஆம்பூர் பஸ் நிலையம் வந்தார்.
நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது வேலூரில் இருந்து வாணியம்பாடி சென்ற பைக் இவர் மீது மோதியது. இதில் காயமடைந்த ராமலிங்கம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.