லைஃப்ஸ்டைல்
குழந்தையின்மை

குழந்தை தான் ஒரு தம்பதியரின் வாழ்வை முழுமையாக்கும்

Published On 2021-08-27 05:33 GMT   |   Update On 2021-08-27 06:32 GMT
ஒரு குடும்பத்தின் எதிர்காலம் அதன் வாரிசான குழந்தைகள் தான். அதற்காக இன்று தவம் கிடப்போர் ஏராளம். குழந்தையின் அருமை குழந்தை இல்லாத தம்பதியர்க்கு தான் தெரியும்.
குழந்தை செல்வம் தான் மிக உயர்ந்த செல்வம். அதனால் தான் நம் பாரம்பரியத்தில் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது நலம் விசாரித்து விட்டு கேட்கும் முதல் கேள்வி என்னவென்றால், உங்களுக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள்? என்பது தான். யாரும் சொத்து குறித்து கேட்பதில்லை. ஏனென்றால் குழந்தைகள் தான் ஒரு குடும்பத்தின் சொத்து. குழந்தை தான் ஒரு தம்பதியரின் வாழ்வை முழுமையாக்கும். குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு தான் தெரியும் குழந்தையின்மையின் அருமை.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இயற்கையே செய்யும் குடும்பக்கட்டுப்பாடு விகிதம் அதிகரித்து வருகிறது. அதாவது திருமணம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் மகப்பேறு கிட்டாத தம்பதிகள் ஊருக்கு ஊர் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த
குழந்தை
யில்லாத நிலை இன்று எங்கும் நிறைந்து இருக்கிறது.

குழந்தை பெறுவதில்தான் ஒரு பெண் முழுமையடைகிறாள். ஒரு கணவன்-மனைவி தாம்பத்தியத்துக்கு கிடைக்கும் அன்பு பரிசு தான் குழந்தை செல்வம் தான்.

குழந்தையின்மை எந்த அளவுக்கு சிக்கலானது. எந்த அளவு அது ஒரு பெண்ணை, ஒரு ஆணை பாதிக்கிறது? பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு குழந்தையின்மை இருந்ததா? ஏன், மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே இருக்கிறது. பைபிள் காலத்தில் கூட குழந்தை இல்லாத பல பெண்கள் குழந்தைபேறு பெறுவதற்கு அடிமைகளை வாடகை தாய்களாக பயன்படுத்தியதாக குறிப்புகள் உள்ளன.

தங்களுக்கு வாரிசு கேட்டு கடவுளை வேண்டாத பெண்களே இருக்க மாட்டார்கள். தன் வயிற்றில் சுமக்கக்கூடிய குழந்தைபேறு ஒரு அற்புத சுகம் என்று, அற்புதமான பரிசு என்று அதனை எதிர்நோக்காத பெண்களே இல்லை. ஆண்கள் மட்டும் விலக்கல்ல, சித்தப்பா மாமா என்று கூப்பிடும் சொந்தங்கள் இடையே அப்பா என்று அழைக்க தனக்கு ஒரு குழந்தை தேவை என்று மனசு அங்கலாய்க்கிற ஆண் கள் பலர். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் சொந்த பந்தங்களின் வீட்டு விழாக்களில் கூட பங்கேற்க முடியாமல் தவிக்கிறார்கள். ஏன் என்றால் அங்கு செல்லும் போது உறவினர்கள் கேட்கும் முதல் கேள்வி உனக்கு எத்தனை குழந்தை உள்ளது என்பது தான்.

குழந்தை தான் ஒரு தம்பதியரின் வாழ்வை முழுமையாக்கும். குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு தான் தெரியும் குழந்தையின்மையின் அருமை.
வழக்கமாக ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றால் அப்பெண்ணின் கணவர் மறுமணம் செய்துகொள்வார். அல்லது தத்தெடுத்துக் கொள்வார்கள். வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் வழக்கமும் உள்ளது.

இந்த நிலை எதற்கும் ஆட்படாமல் எந்த பெண்ணும் குழந்தைபேறு பெற முடியும். எந்த வயதிலும் குழந்தை பெற முடியும். திருமணமாகி எத்தனை வருடங்கள் ஆனாலும் குழந்தை பேறுபெற முடியும் என்ற நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

பகுதி1: குழந்தையின்மை என்பது குறையல்ல

கருக்குழாய் அடைப் பானால் ( Fallopion tube Block ) தத்தெடுப்பு மற்றும் மறுமணம் என்ற நிலை மாறியது. 1978 July 25ல் செயற்கை கருத்தரிப்பு (IVE) முறையில் LOUTS BROWN பிறந்தது.

பகுதி2: குழந்தையின்மை சிகிச்சை முறையில் ஏற்பட்ட மாபெரும் திருப்பம்.

குருக்குழாய் (fallopian tube) அடைப்பா? கவலையில்லை. பெண்ணின் முட்டையை எடுத்து கணவரின விந்துடன் சேர்த்து IVF(Invitro fertilisation) முறையில் குழந்தை பெறலாம். ஆண்கருக்கு விந்தனுவே இல்லை (Azoospernia) என்றால் விந்துதானம் ஒன்றே வழி என்ற நிலை மாறி 1991 ICSI முறையில் ஜிணிஷிகி, றிணிஷிகி, முறையில் ஆணின் விந்துப் பையில் இருந்து விந்து எடுத்து மிசிஷிமி முறை யில் தன் மரபணுவில் குழந்தை பெறமுடியும்.

பகுதி3: விந்தணுக்கள் தானம் பெற்று வேறு யாருடைய குழந்தையாவது பெற்றுகொள்வதா? எனக்கு ஒரு குழந்தை பிறக்குமா? என்பவாகளுக்கு இக்கிறது இஸ்சி (ICSI) முறை. பீசா, மீசா MISA முறையில் விந்தணுகளை எடுத்து இஸ்சி செய்யும் முறையில் குழந்தை பெறலாம்.

கர்ப்பபையே இல்லை. பிறக்கும் பெற கர்ப்பபை இல்லை, நான் எப்படி தாயாக முடியும்? என்னுடைய ஜெனிடிக்கில் குழந்தை எப்படி பெற்று கொள்வது? அதற்கும் இருக்கிறது ஒரு வழி. வாடகை தாய் முறை. இதன் மூலமாக உங்களுடைய மரபியல் சார்ந்த குழந்தை பெற்று கொள்ள முடியும். மாதவிலக்கு நின்றுவிட்டது. என்னால் எப்படி குழந்தை பெற முடியும்? இப்படிபட்டவர்களுக்கு இருக்கும் ஒரே வழி கருமுட்டைகள் தானம் பெற்று
குழந்தை
பெற முடியும்.

அதனால் குழந்தையின்மை ஒரு குறை யில்லை . எந்தவித குறைபாடுகள் இருந்தாலும் எல்லாரும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். நவீன சிகிச்சை முறைகளினால் குழந்தை யின்மை என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. வயது மூப்பு, கர்ப்பபை கருக்குழாய் அடைப்பு போன்றவை குழந்தை பெறுவதற்கு தடையல்ல. எல்லாவற்றிற்கும் நவீன சிகிச்சை முறைகள் உண்டு.

அம்மா என்று அழைக்க ஒரு குழந்தையும் அப்பா என்று அழைக்க ஒரு வாரிசையும் உருவாக்க முடியும். விஞ்ஞான வளர்ச்சியின் மூலமாக குழந்தையின்மை என்ற வார்த்தை அகராதியில் இனி இருக்கப்போவதில்லை. நவீன சிகிச்சை முறைகள் பல உள்ளன. இதன் மூலம் குறைபாடுள்ள தம்பதிகளும் நிச்சயம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.

அது குறித்த விரிவான விளக்கங்களை அடுத்தடுத்த வாரங்களில் பார்க்கலாம்...

டாக்டர் ஜெயராணி காமராஜ்
72999 74701
Tags:    

Similar News