செய்திகள்
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 24-ந்தேதி நடக்கிறது
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது பற்றியும், உட்கட்சி தேர்தலை நடத்துவது பற்றியும் விவாதிக்கப்பட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை:
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க எல்லா கட்சிகளும் ஆயத்த பணிகளை செய்ய தொடங்கி உள்ளன.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது பற்றியும், உட்கட்சி தேர்தலை நடத்துவது பற்றியும் விவாதிக்கப்பட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க எல்லா கட்சிகளும் ஆயத்த பணிகளை செய்ய தொடங்கி உள்ளன.
அ.தி.மு.க. சார்பில் தேர்தலை சந்திப்பதற்காக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசிக்க உள்ளனர். இதற்காக வருகிற 24-ந்தேதி (புதன்கிழமை) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழக அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது.
இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது பற்றியும், உட்கட்சி தேர்தலை நடத்துவது பற்றியும் விவாதிக்கப்பட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கிளைக் கழகம் முதல் மாவட்ட செயலாளர்கள் வரையிலான பொறுப்புகளுக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார்கள்.
இதையும் படியுங்கள்... தகுதியான விசா வைத்திருப்பவர்கள் ஆஸ்திரேலியா வரலாம்: பிரதமர் ஸ்காட் மோரிசன்