செய்திகள்
அதிமுக

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 24-ந்தேதி நடக்கிறது

Published On 2021-11-22 06:58 GMT   |   Update On 2021-11-22 06:58 GMT
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது பற்றியும், உட்கட்சி தேர்தலை நடத்துவது பற்றியும் விவாதிக்கப்பட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை:

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க எல்லா கட்சிகளும் ஆயத்த பணிகளை செய்ய தொடங்கி உள்ளன.



கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது பற்றியும், உட்கட்சி தேர்தலை நடத்துவது பற்றியும் விவாதிக்கப்பட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கிளைக் கழகம் முதல் மாவட்ட செயலாளர்கள் வரையிலான பொறுப்புகளுக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார்கள்.


Tags:    

Similar News