கிறித்தவம்
கிறிஸ்தவ தேவாலயங்களில் குடில்கள் அமைத்து வழிபாடு

கிறிஸ்தவ தேவாலயங்களில் குடில்கள் அமைத்து வழிபாடு

Published On 2021-12-23 02:49 GMT   |   Update On 2021-12-23 02:49 GMT
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நிகழ்வை சித்தரிக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கிறிஸ்தவ தேவாலயங்களிலும் குடில்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.
உலகம் முழுவதும் வருகிற 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் டிசம்பர் மாத தொடக்கம் முதலே கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளின் முன்பு வண்ண நட்சத்திரங்கள் தொங்க விட்டு வருகிறார்கள். கிறிஸ்துமஸ் மரங்கள் வைத்து வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்து வருகிறார்கள்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நிகழ்வை சித்தரிக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வீடுகளில் பல்வேறு விதங்களில் குடில்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கிறிஸ்தவ தேவாலயங்களிலும் குடில்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் கொல்லம்பாளையம் பகுதியில் உள்ள கார்மல் பள்ளிக்கூடத்தில் பிரமாண்ட குடில் கட்டப்பட்டு உள்ளது. மாட்டுக்கொட்டிலில் இயேசு பிறந்த நிகழ்வை நினைவூட்டும் குடிலும், அதை சுற்றி ஆட்டு இடையர்கள், ஆடு, மாடுகள் படுத்து இருக்கும் காட்சியும் தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ளன.

மேலும், இயேசுவை சந்திக்க வரும் 3 ராஜாக்கள் பாலை நிலத்தில் வரும் காட்சியும் சிறிய சிலைகள் வடிவில் அமைக்கப்பட்டு உள்ளன. கிறிஸ்து பிறப்பு தொடர்பான நிகழ்வுகளை சித்தரிக்கும் காட்சிகளும் வைக்கப்பட்டு உள்ளன. வண்ண விளக்குகள் அலங்காரத்தில் குடில் பார்ப்பவர்களை கவரும் வகையில் உள்ளது.

இதுபோல் பல்வேறு பகுதிகளிலும் குடில்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
Tags:    

Similar News